இடுகைகள்

மார்ச், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசியல் அற்றதாக்கும் அரசியல்...

தமிழ்நாட்டில் அதிகரித்த்திருக்கும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான மாணவர் போராட்டங்கள் கவனிக்கத் தக்கதாய் மாறியிருக்கிறது.. அல்லது மாற்றப்பட்டிருக்கிறது.. இதற்கு முன்னும் தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் இதே வீச்சோடு நடைபெற்றிருந்த போதிலும் இந்த போராட்டத்தின் தன்மை மிக ஆழமாக கவனிக்கத் தக்கதாய் இருக்கிறது.. இந்த போராட்டம் ஒரு அரசியலற்ற போராட்டம் என மீண்டும் மீண்டும் உரத்து சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.. ஆச்சர்யமாய் இருக்கிறது... அத்தோடு இயற்கைக்கு முரணாகவும் உள்ளது.. அரசியலற்ற ஒரு போராட்டம் எப்படி ஒரு அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை வென்றெடுக்க முடியும்..??? உண்ணும் உணவிலிருந்து உறங்க உதவும் படுக்கை வரை யாவற்றிலும் அரசியலே நிறைந்திருக்கும் போது அரசியலற்று எப்படி ஒரு அரசியல் போராட்டம் முன்னேற முடியும்...??? உண்மையில் இந்த போராட்டம் அரசியல் அற்றதாய் இல்லை.. ஆனால் அரசியல் அற்றதாக்க படுகிறது... அது தான் அவர்களின் விருப்பமும் கூட... இப்படி ஒரு போர்க்குனமிக்க பெருங்க்கூட்டம் அரசியலுக்குள் வந்து விடக்கூடாது என்ற அவர்களின் கவனம் மிக அசிங்கமாக அம்பலப்படுகிறது...