கேளா செவிகள் கேட்க செய்திட....
அணி திரட்டபடாத தொழிலாளர்கள் குறித்து நாம் தொடர்ந்து பேசி கொண்டு இருக்கிறோம்... தொழிற்சாலைகளில், அரசு நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு என பேசுவதற்கு அவரவர்க்கான தொழிற்சங்கங்கள் இருப்பது போல அல்லாமல் எந்த சமூக பாதுகாப்பும் இன்றி, எந்த தொழிற்சங்க பாதுகாப்பும் இன்றி அங்காடி தெருக்களில் இருக்கிற லட்சகணக்கான தொழிலாளர்கள் குறித்து கவலையும் அக்கறையும் கொள்வோருக்கான செய்தி இது.... சாத்தூரில் எட்டுர்வட்டம் அருகே தங்க நாற்கர சாலையில் அமைக்கப்பட்டுள்ள tolegate ல் பணிபுரியும் தொழிலாளர்கள் tolegate ன் காண்ட்ராக்ட் மாறிய ஒரே காரணத்தால் இரண்டு நாள்களுக்கு முந்திய காலையில் வீதியில் வீசி எறியப்பட்டனர்... மார்க்சிஸ்ட் கட்சி, CITU , புதிய தமிழகம் உள்ளிட்ட அமைப்புகள் தலை இட்டு tolegate அலுவலகத்தை முற்றுகை இட்டதின் விளைவாக தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது... போராட்டத்தில் பங்கேற்ற citu மாவட்ட பொது செயலாளர் தோழர் முத்துவேல் அவர்களிடம் tolegate ஊழியர் சங்கம் அமைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்... அதற்க்கான நடவ