இதுவும் மாநாட்டுப் பணிதான்... நிறைவுக்குப்பின் ஊரையே சுத்தம் செய்த மார்க்சிஸ்டுகள்
கோழிக்கோடு நகரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது அகில இந்திய மாநாடு அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது போலவே சுற்றுச்சூழல் குறித்தும் குறிப்பான தாக்கத்தை ஏற்படுத்தியது.மாநாடு நடத்திவிட்டு மறுநாள் அவரவர் வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள் என்பது பொதுவாகச் சொல்லப்படும் கருத்தாகும். இப்படித்தான் கோழிக்கோடு மாநாடு பற்றியும் ஊடகங்கள் எழுதின. பாருங்க,,, குப்பையாக்கி விடுவார்கள் என்று மலையாள மனோரமா உள்ளிட்ட பத்திரிகைகள் கதை விட்டுக் கொண்டிருந்தன. மாநாட்டில், கட்சியின் அரசியல், தத்துவார்த்த மற்றும் ஸ்தாபன அம்சங்கள் பற்றியெல்லாம் நடந்த விவாதங்களை இந்த ஊடகங்கள் மக்களுக்குக் கொண்டு சேர்க்க முயலவில்லை. தேவையற்ற கேள்வி ஒன்றை செய்தியாளர் சந்திப்பின்போது ஒருவர் கேட்டபோது, இதில் எல்லாம் உங்களைப் போன்ற பெரிய பத்திரிகைகள் எப்போதிருந்து கவனம் செலுத்தத் துவங்கின என்று சிரித்துக் கொண்டே அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கேட்டு அந்த செய்தியாளர் சந்திப்பின் திசைவழியை ஒழுங்குபடுத்தினார்.மாநாடு என்று அறிவித்ததிலிருந