இடுகைகள்

ஜனவரி, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ஒடுக்கப்பட்டவர்களே.... உரிமைகளை கேட்டு வன்முறையை தூண்டாதீர்கள்...! இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அறிவித்த போராட்டத்திற்கு தமிழகத்தின் முதல்வர் கலைஞர் கருணாநிதி, போராட்டத்திற்கு முன்தினம் தனக்கே உரிய முறையில் ஒரு குழப்பமான அறிக்கையை வெளியிட்டார். ஆலய நுழைவுப் போராட்டம் வன்முறையில் முடியக்கூடாது என்ற தனது கவலையைத் தெரிவித்திருந்தார். ஆண்டாண்டு காலமாய் பொது இடங்களில் தலித் மக்களை அனுமதிக்காதது அவருக்கு வன்முறையாய் தெரியவில்லை போலும். "ஆண்டவன் அருகில் நின்று அவனுக்கு அர்ச்சனை செய்யும் உரிமையையும் தி.மு.கழக அரசு பெற்றுத் தந்துள்ளது. ஆனால் அரசியல் சட்டமே ஏற்றுக் கொண்டுள்ள நிலைக்கு மாறாகவும், ஆன்றோரும், சான்றோரும் அறிவியக்கப் பெரியவர்களும், ஆன்மீகப் புரட்சியாளர்களும் ஏற்றுக் கொண்டு சர்வேஸ்வரனை வணங்கவும் துதித்துப் பிராத்திக்கவும் - சம உரிமை அனைவருக்கும் உண்டு என்ற நிலை நடைமுறைக்கு வந்துள்ள இந்தக் காலக்கட்டத்திலும்", “ஆலய நுழைவுக்காக போராட்டம் நடத்துவோராயினும் அதை எதிர்க்கும் வைதீகக் கூட்டத்தினராயினும்; அறவழியில் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள சட்டரீதியான அணுகுமுறைகள