இடுகைகள்

2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
வரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி ஆர். நல்லகண்ணு காலச்சக்கரத்தை திரும்பிப் பார்க்கிறேன் சரியாக 37 ஆண்டுகள். வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் 37 ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். நேற்று நடந்தது போல இருக்கிறது. தஞ்சாவூர் அருகே அன்று நடந்த கொடுமையை இன்று நினைத்தாலும் நெஞ்சில் குருதி வடிகிறது. இந்தியாவில் நடைபெற்ற உக்கிரமான கொடுமைகளை பட்டியலிட்டால் கீழ வெண்மணி கொடுமையும் ஒன்று. அன்று நடந்த கொடுமையை நான் வாசகர்களுக்கு பதிவு செய்கிறேன். 1968 டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை ஏசுநாதர் பிறந்த நாள் விழா உலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது. ஆம் . அன்றிரவு தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கருகிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு தீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை. தாழ்த்தப்
“சாதி’’ இந்திய சமூகத்தை, “மேலும் ஆய்வை நோக்கிச் செல்’’ என நிர்பந்திக்கிற வார்த்தை. கார்பன் பரிசோதனையோ, வேறு பரிசோதனைகளோ, “சாதி’’ என்கிற வார்த்தை மீது செல்லுபடி ஆவதில்லை. இ.எம். சங்கரன் என்கிற இ.எம்.எஸ் மார்க்சியத் தத்துவத்தை இந்திய மண்ணில், மண்ணுக்கேற்ற மார்க்சியமாக வளர்ப்பதற்கு முயற்சித்த தத்துவவாதி. ஒருமுறை இ.எம்.எஸ் “நான் முதலில் சீர்திருத்தவாதி, பின் இடதுசாரி, பின் கம்யூனிஸ்ட்’’ என்று, தன் வளர்ச்சியை, தன் சிந்தனை வளர்ச்சியுடன் ஒப்பிட்டு வரையறை செய்திருக்கிறார். கேள்விக் கணைகள் மூளையை கசக்கியதாலேயே, இ.எம்.எஸ் என்கிற மனிதன் மார்க்சியவாதியாக மலர்ந்திருக்கிறார். இ.எம்.எஸ் பிறந்த, வளர்ந்த குடும்பப் பின்னணியை விளக்குவது கட்டுரையின் நோக்கமன்று, ஆனாலும் அவர், நிலையில் உயர்ந்ததாகக் கூறப்படுகிற சாதியில் பிறந்தவர், நிலப்பிரபுத்துவக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இளம் வயதில் தன் வாழ்க்கை மீது அவர் எழுப்பிய கேள்விகளின் விளைவு தான், வேதங்களின் நாடு, இந்திய வரலாறு ஆகிய புத்தகங்கள். சிலர் மார்க்சிஸ்ட் இயக்கத்தை விமர்சிக்க இ.எம்.எஸ். ஏன் நம்பூதிரிபாட் என்ற சாதிய வார்த்த

மறுபடியும் போராட்டம்...

கல்வி இல்ல... வேல இல்ல... கவர்மெண்டு சலுக பெற ரேசன் கார்டும் கையில் இல்ல... அப்ளிகேசனோட போனா அது இல்ல இது இல்லன்னு அலைய விட்டே ஆயுச முடிச்சுடுரானுங்க... காரணம் வேணாம் எங்களுக்கு... கார்டு தான் வேணும்னு சொல்லி மனு கொடுக்கும் போராட்டம் அறுபது நாளில் தரலேன்னா அவசியம் இருக்கு... .. மறுபடியும் போராட்டம்.. டி.ஒய்.எப்.ஐ. போராட்டத்திற்காக எழுதியது

சே எனும் சிப்பாய்....

அக்டோபர் - ஒன்பது.. காற்றின் வெளிகளில் திசைகளற்று..., எல்லைகளற்று... ஒட்டு மொத்த மானுட விடுதலையை இலக்காக்கி திரிந்த அந்த பறவை கோர பசி கொண்ட ஏகாதிபத்தியம் எனும் அரக்கனின் துப்பாக்கி ரவைக்கு பலியான தினம்... அய்யகோ பாவம்... அரக்கனின் ஆசை நிராசையாகி போனது... அந்த பறவை மீண்டும் மீண்டும் எழுகிறது... உலகெங்கும் இருந்து ஆயிரமாயிரமாய்... ஏகாதிபத்தியம் இப்போது புரிந்திருக்கும்... அன்று சுட்ட துப்பாக்கி அவனை நோக்கி அல்ல.. தன்னை நோக்கி திரும்பி இருந்ததை... அக்டோபர் 18ம் தேதி கியூபாவில் ஒரு மிகப் பெரிய அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. மார்ட்டியின் நினைவுச்சின்னத்திற்கு கீழே மேடை போடப்பட்டிருந்தது. பிடல் காஸ்ட்ரோ, உதவி பிரதமர் ரால் காஸ்ட்ரோ, அதிபர் டோர்ட்டிகாஸ், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆர்மண்டோ ஹார்ட் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள். லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு திரண்டிருந்தார்கள். கியூபாவின் கொடிகள் அரைக்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. கியூப கவிஞர் நிக்கோலஸ் கியுல்லன் சேகுவாராவிற்கு அஞ்சலி செலுத்தி கவிதை வாசிக்க நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. பிளாசாவின் பெரிய திரையில், ம

காற்றின் வெளியிடை கண்ணம்மா.....

"எனக்கு சம்மதமே.. மாலையாக இருந்தால் மலராக மட்டுமல்ல... நீ பாலையாக இருந்தால் மணலாக கிடக்கவும்..." நிச்சயம் வைரமுத்து எழுதிய இந்த கவிதை நினைவிருக்கும் உனக்கு... ஒரு வேலை இப்போது நினைவில்லை என நீ பொய் சொல்ல முயலலாம்... முயற்சிக்காதே முடியாது உன்னால்... உனக்கு நான் எழுதிய முதல் காதல் கடிதத்தில் இடம் பெற்ற கவிதை... ஆம் அப்போது நீ மாலையாக இருந்தாய் நான் மலராக இருந்தேன்.. இப்போது நீ பாலையாக... நான் இல்லை நம் காதல் மணலாக......

வாழ்த்துக்கள் தோழர்...

தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான சினிமா விருதுகளை அறிவித்துள்ளது.... தமிழக அரசின் ரசிக லட்சணம் வெளிச்சமாகியுள்ளது... ஒன்று இரண்டை தவிர.. அந்த வகையில் ஆணாதிக்க மனோபாவ சமூகத்தில் ஒரு பெண்ணின் காதலும் வலுவானதே என்று உரத்து ஒலித்த.. பெண்ணுக்கும் ஒரு ஆட்டோகிராப் இருக்கும்.. இருப்பதில் எந்த பிழையும் இல்லை என முழங்கிய... பூ படத்திற்கு கிடைத்திருக்கும் சிறந்த கதாசிரியர் விருது... வாழ்த்துக்கள் தோழர் தமிழ்செல்வனுக்கு ...

அரிவாள் - சுத்தியல்...

துப்பாக்கிகளையும்... பீரங்கிகளையும்... திணறடித்த திருநாள். திரும்பும் ஓர்நாள்...... -இந்தியதொழிற்சங்க மையத்தின் ஏழாவது மாவட்ட மாநாட்டை வாழ்த்தி டி.ஒய். எப் .ஐ சார்பாக வைக்கப்பட்ட பேனர் விளம்பரத்திற்காக எழுதியது.... பேனரில் இல்லை... காரணமும் இல்லை... ஆகவே வலை பக்கத்தில்....

துப்பாக்கிகள் அடங்கியிருக்கும் இப்போதேனும்...

என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் என்ன பேசிக்கொண்டிருந்தாலும் மனதின் பின் திரையில் சத்தமில்லாத ஒரு மௌனப்படமாக இலங்கையில் தமிழ் மக்கள் கதறியழுவதும் பெண்கள் இருகரம் விரித்து வானத்தை நோக்கிக் கதறிப் பேசுவதும் லாரிகளிலிலிருந்து அன்று கொன்ற ராணுவத்தினர் இன்று நீட்டும் உணவுக்காகக் கைகள் ஏந்தி மக்கள் வெறித்து நிற்பதும் என ஒரு காட்சி சதா ஓடிக்கொண்டே இருக்கிறது.குற்ற உணர்வும் வலியும் இயலாமையின் துக்கமும் மாறி மாறி மனதில் அலையடித்துக்கொண்டே இருக்கிறது. சுனாமியில் கணவன்,குழந்தைகள் என எல்லோரையும் இழந்துவிட்ட அந்த லட்சுமி அம்மாள் அன்று கடற்கரையில் நின்று கடலோடு உரத்துப் பேசிக்கொண்டிருந்த காட்சியும் கூடவே அலையடிக்கிறது. எல்லோராலும் கைவிடப்பட்ட (உன்னாலும் கூடத்தான் என்று உள்ளிருந்து குரல் கேட்கிறது) ஒரு சமூகம் அங்கே முகாம்களில் (அது என்ன லட்சணத்தில் இருக்கிறதோ) அலைபாய்ந்து கொண்டும் அடைபட்டும் கிடக்கிறது.இங்கே தமிழகத்திலேயே அகதிகள் முகாம்கள் கோழிகள் அடைக்கப்பட்டிருந்த ஷெட் களில்தான் முதலில் அமைக்கப்பட்டன என்பது நினைவுக்கு வருகிறது.ஆண்டுகள் பலவாக செருப்பில்லாத கால்களுடன் குரைக்கும் துப்பாக்கிகளுக்கு இடை

கலகம்...

வாழ்க்கை முழுக்க கனவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் போல தான் தோன்றுகிறது...... தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என விரும்பும் சில... கனவாகி விடுமோ என்ற பேரச்சம் துரத்துகிறது..... மீண்டும் " கலகம் " கொண்டு வர வேண்டும் என்ற ஆசை தலை தூக்கி இருக்கிறது... அனேகமாக ஆகஸ்ட் முதல் வரும் பார்க்கலாம்.... வடிவம்.... பனிரெண்டு பக்கங்களாக இருக்கும்...

நாம் வெல்வோம்........

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்விகள் ஏற்படுத்திய வடுக்கள் ஆற தொடங்கி இருக்கிறது... தோல்வியை தோல்வியாகவே ஒப்புக் கொண்டு படிப்பினை பெற்று முன்னேறுவோம் என தோழர்.பிரகாஷ் காரத் சொன்னது மட்டுமே மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது... இந்த ஆண்டுக்கான இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர் சேர்ப்பு பணிகள் தொடங்கி உள்ளது... இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.. இது வரை நடந்த பதிவு எண்ணிக்கையை முறியடிக்க வேண்டும்.. புதிய பகுதிகளுக்குள் வாலிபர் சங்க உறுப்பினர் அட்டையை கொண்டு சேர்க்க வேண்டும்... வெறும் உறுப்பினர் சேர்க்கும் பணியாக மட்டுமின்றி... ஆயிரமாயிரம் மனிதர்களை சந்திக்கும் பெரும் வாய்ப்பை இந்த இயக்கம் அளிக்கும்... ஊழியர்களே இல்லை எனினும் அவர்கள் கூட்டம் கூட்டமாகவே உள்ளனர் என்ற தோழர்.லெனின் அவர்கள் உரைத்த நிஜத்தை நம் காண போகிறது... முன்னேறுவோம்... வெற்றி பெறுவோம்... நாம் வெல்வோம் ஓர்நாள்.........
மாவோயிஸ்ட்டுகள் என்ற பெயரில் மரணத்தின் தூதுவர்கள் - ஜார்க்ரம் (மேற்குவங்கம்), ஜூன் 25-அபிஜித் மகதோ என்ற அந்த மாணவ னின் உடலிலிருந்து கொட்டிய ரத்தமும், அவனை சரமாரியாக சுட்டபோது விழுந்து தெறித்த கண்ணாடியின் துகள்களும் மண் ணோடு மண்ணாக கலந்து காய்ந்துக் கிடக் கின்றன.ஜூன் 17.காலைப் பொழுதில், இந்த மாணவனை தங்களது எதிரி என்று தீர்மானித்த அவர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டுக் கொன் றனர்.கல்லூரிக்கு போய்விட்டு திரும்பி வரு வதற்குள் தங்களது குடும்பத்தினரும், கிரா மத்தைச் சேர்ந்த மக்களும் ஆயுத முனையில் ஊரை விட்டு விரட்டப்பட்டதால், அங்கிருந்து டிராக்டர்களில் ஏறி காரக்பூர்- ராஞ்சி நெடுஞ்சாலையில் அச்சத்துடனேயே வந்துக் கொண்டிருந்ததை பார்த்து, அவர்களோடு சேர்ந்து கொண்டார் அபிஜித் மகதோ. அன்று இரவு முழுவதும் சக தோழர்களோடு கண்விழித்து தனது கிராமத்து மக்களுக்காக கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட மகதோ, தனது சக நண்பர்கள் அனில் மகதோ, நீலா தர் மகதோ ஆகியோருடன் அருகில் இருந்த கடையில் தேநீர் குடித்துக் கொண் டிருந்தார்.இவர்களை தேடி ஆறு மோட்டார் சைக் கிள்களில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுடன் வந்த அவர்கள், வாகனங்களிலிருந
நீங்கள் அவர்களைப் பார்த்திருக்கக் கூடும்! நீங்கள் அவர்களைப் பார்த்திருக்கக் கூடும்.எதாவது ஒரு கோவில் முன்பாகவோபள்ளிக்கூடம் அருகிலோபேருந்து நிறுத்தங்களிலோசிலநேரம் உங்கள் தெருக்களிலோ கூடநிச்சயமாய் பார்த்திருக்கக் கூடும்.எங்கிருந்தாலும் மண்ணோடுதான் இருக்கிறார்கள், வாழ்கிறார்கள்.மக்கிப்போன கந்தல் ஆடைகளைச் சுற்றியபடிகுளிக்காமல் சிக்குப் பிடித்த முடிகளோடுநாற்றமெடுக்கும் அவர்களைப் பார்த்துமுகம் சுழித்து விலகிப் போயிருக்கவும் கூடும்.வான் நோக்கி சிரித்தபடி ஓடுகிறார்கள்காற்றோடு சதாநேரமும் கதை பேசுகிறார்கள்எல்லோரிடமும் கைநீட்டி நிற்கிறார்கள்யார், எப்படி, எது, என்ன, எங்கு, எப்போதுஎன ஆரம்பித்து எதாவது ஒரு கேள்விஅவர்களைப் பற்றி எழுந்திருக்கிறதா?பிரக்ஞையற்ற அவர்களின் அந்தரங்க அவயங்கள்உங்கள் பார்வையில் பதிந்திருக்கக் கூடும்காமம் வெளியேறிய உடலா அதுஒருகணம் யோசித்திருக்கிறீர்களா?அவர்களையும் ஒருதாய் வலியோடு பெற்றிருப்பாள்நம்மைப்போலவே தவழ்ந்து, எழுந்து, நடந்திருப்பார்கள்சின்னதாய் ஒரு சினேகமோ நெருக்கமோ என்றைக்காவது வந்திருக்கிறதா?

அடியோடு ஒழிப்போம் அடிக்கும் வழக்கத்தை...

வலைத்தளப் பதிவொன்றில் ஒரு பெண்மணி ஒரு சுவாரசியமான செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். ஒரு மூன்று மாதம் மட்டும் தனியார் துவக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்த அனுபவம் அதில் முக்கியமானது. அவர் வகுப்பறையில் நுழைந்த மாத்திரத்தில் குழந்தைகள் சுற்றிச் சூழ்ந்து கொண்டு, டீச்சர், டீச்சர் என்று குதூகலித்துக் கூவுவார்களாம். ஒரே பாட்டும் சத்தமும் பறக்குமாம் வகுப்பில். மற்ற ஆசிரியைகள், சரிதான் அந்தப் புதுக் கிறுக்குடைய வகுப்பாகத்தான் இருக்கும், என்ன வேண்டிக் கிடக்கிறது வகுப்பறைக்குள் கும்மாளம் என்று அலுத்து சலித்துக் கொண்டு நகர்வார்களாம். இந்தப் பெண்மணி ஒருநாள் அந்தக் குழந்தைகளிடம் நேரே கேட்டிருக்கிறார், ஏன் என்னைக் கண்டால் மட்டும் இத்தனை உற்சாகமாக இருக்கிறீர்கள் என்று.....அந்த இளந்தளிர்கள் ஒரே குரலில் சொன்ன பதில் என்ன தெரியுமா: 'வகுப்பறைக்குள் கையில் குச்சி இல்லாமல் நுழையும் ஒரே ஆசிரியை நீங்க தானே மிஸ்' என்பதுதான். Teacher கோலெடுத்தால் குரங்காடும் என்பதுதானே பழமொழி - குழந்தைகளுக்கு எதிராகக் கோலாட்டம் என்ன வேண்டியிருக்கிறது? ஆசிரியை என்பவர் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள

அஞ்சலி.....

படம்
கமலாதாஸ் என்றும் மாதவிக்குட்டி என்றும் மாதவிசுரய்யா என்றும் அறியப்பட்ட -- மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் /கதைகள் எழுதிய என் பிரியத்துக்குரிய மூத்த படைப்பாளி - என் இளமைக்காலத்தின் அடையாளங்களில் ஒன்றாக என் வாழ்வோடு இரண்டறக்கலந்திருந்த கமலாதாஸ் கடந்த 31 ஆம் தேதி புனேயில் காலமாகிவிட்டார் என்கிற செய்தி என்னைப் பெரும் துயரில் ஆழ்த்திவிட்டது(இந்த வரிக்கான உண்மையான அர்த்தத்தில்). 1974இல் நான் ராணுவத்தில் இருந்தபோது இமயமலையின் சரிவுகளில் கவிதைகளோடு துள்ளித்திரிந்த பருவத்தில் கமலாதாசை நான் கண்டடைந்தேன். “ மூன்று மொழிகளில் பேசுகிற-இரண்டு மொழிகளில் எழுதுகிற ஆனால் ஒரே மொழியில் கனாக் காண்கிற ” அந்தப் பெண்மணியின் கவிதைகள் தாம் நான் முதலில் வாசித்தது. ஜெயகாந்தனும், நா.பார்த்தசாரதியும் படித்துக்கொண்டிருந்த அந்த நாளின் என்னைத் தலைகீழாகக் கவுத்திப் போட்டன கமலாதாசின் எழுத்துக்கள்.தொடர்ந்து அவருடைய ‘ My Story’ படித்தேன்.அவர் எழுத்துக்களின் மீது பித்தானேன். அவரைப்போன்ற நேர்மையான ஓர் எழுத்துக்காரரை இந்தியாவில் நான் இதுவரை கண்டதில்லை.என்ன நேர்மை.என்ன ஒரு துணிச்சல்.எல்லாமே அதன் உச்சத்தில்.ப

தேர்தல்......

அழகிரியார் மாவட்டத்தில் நாடாளுமன்றத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததும் அதற்கான விஞானப்பூர்வமான ஏற்பாடுகளைச் செய்து ஒரு புதிய தொழில்நுட்பத்தை அண்ணன் உலகுக்கு அளித்ததும் அனைவரும் அறிந்த பழைய செய்திகள். இப்போது மேலும் மேலும் பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.அவற்றில் என் மனதைத் தொட்ட ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்கிறேன். அநேகமாக அழகிரி மாவட்டத்தின் 70 சதவீத வாக்காளர்களுக்கு கவர் பெண் போலீசார் மூலமும் மற்றும் பொருத்தமான அரசுத்துறை நபர்கள் மூலமும் (effective use of govt machinery – இதில் 60 ஆண்டு ஆல் இண்டியா அனுபவம் உள்ள காங்கிரசெல்லாம் அண்ணனிடம் பிச்சை வாங்க வேண்டும்) போய்ச்சேர்ந்துள்ளது.சத்தமில்லாமல் எல்லோரும் வாங்கிக்கொண்டார்கள்.வாங்க மறுத்தால் அண்ணனுக்கு எதிர் வாக்கு என்று அடையாளப்படுத்தப்பட்டுவிடும் அபாயம் கருதியும் பலர் மறுக்கவில்லை.மார்க்சிஸ்ட் ஊழியர்கள் குடியிருக்கும் பகுதிகளில் யாருக்குமே பணப்பட்டுவாடா நடக்கவில்லை.பிடிபடும் அபாயம் இருந்ததால்.அதன் காரணமாக சனியன் போல இவன் ஒருத்தன் இங்க வந்து குடியிருக்கான் பாரு. அண்ணன் மூலம் நமக்குக் கிடைக்க வேண்டிய ‘பெனிபிட்’ எதுவும் கிடைக்காமப் போகுது ப

மம்தா, கவாய், கலைஞர்: மாநில உரிமை, சுயமரியாதை............

மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய - விரிவுபடுத்த வேண்டிய காலகட்டம் இது. மக்கள வைத் தேர்தல் முடிவுகளும் அதையே உணர்த்து கின்றன. அந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக இருப்பினும், வாக்குவிகிதத்தை அதிகம் பெற்றிருப் பது மாநிலக் கட்சிகளே. காரணம், மாநில உரிமை களை, நலன்களைப் பேணுவதில் மக்களோடு இக்கட்சிகள் நெருக்கமாக இருப்பதே. ஆனால், மத்திய ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சியான காங்கிரஸ் இதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் தனது பிறந்தநாளன்று ‘மாநில உரிமைக்காக’ தமிழக முதல்வர் உறுதியேற்றதும், தொடர்ந்து அதுகுறித்துப் பேசி வருவதும் வரவேற் கத்தக்கது. மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் இழைக்கப்படும் பாரபட்சம் குறித்து திமுக, அதிமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கொடுத்துள்ள மனுக்க ளில் மாநில உரிமை என்பதே அடிநாதமாக இருக் கிறது. பேராசிரியர் மு. நாகநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, முதல்வரிடம் அளித்த தனது அறிக்கையில் மாநில உரிமைகள் குறித்து சில பரிந் துரைகளை அளித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. தமிழக அரசின் சார்பிலும், திமுக சார்பிலும் முத லமைச்சர் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கிற போது ஜனநாயக இயக்கங

சுயாட்சி.....?!

எப்போதெல்லாம் அவருக்கு தேவைப் படுகிறதோ அப்போதெல்லாம் அவர் மாநில சுயாட்சி கோசத்தை கையில் எடுப்பார்... எப்போதெல்லாம் அவருக்கு நினைத்தது நினைத்த படி மத்தியில் நடந்து விடுகிறதோ அப்போதெல்லாம் அந்த கோசம் பின்னுக்கு போய் விடும்...... இப்போது மீண்டும் கிளம்பி இருக்கிறது.... மகனை துணை முதல்வராக்கிய பின்னணியில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்டு விடக் கூடாது என்ற அச்சத்தின் வெளிப்பாடாக கூட இது இருக்கலாம்....

எழுந்து வருவோம்.......

எல்லாம் அமைதியாக இருக்கிறது ... காற்றின் வெளிகளில் அவர்களின் ஓலம் மட்டுமே வியாபித்து இருக்கிறது .... நாங்கள் தோற்றுப் போனதாய் அதிகாரம் அறிவித்த பிறகு அதிகமாய் கேட்க முடிகிறது அந்த ஓலத்தை .... எதற்கெல்லாம் நாங்கள் இடைஞ்சலாய் இருந்தோமோ அதுவெல்லாம் இனி வேகமாய் வெளிச்சம் பெரும் ..... நம்பிக்கையை தவிர எதுவுமில்லை இப்போது எங்களிடம் .... நம்பிக்கைகளில் இருந்து எப்படி எழுவது என எங்களுக்கு தெரியும் .. எழுந்து வருவோம் ... கவனமாய் காத்திருங்கள் ... அறுபட போவது உங்கள் சங்காக கூட இருக்கலாம் ... .

நன்கொடையா இது....? வன்கொடை அல்லவோ....!

இது கல்வியாண்டு தொடங்கும் சீசன். தொலைக்காட்சிகளிலும் நாளேடுகளிலும் தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளின் விளம்பரங்கள் வந்து பாய்கின்றன. அந்த விளம் பரங்களில் சொல்லாமல் மறைக்கப்படுவது - கல்விக்கட்டண வழிப்பறியையும், நன்கொடை வசூலையும்தான்.நன்கொடை என்றால் ஒருவர் தானாக முன்வந்து அளிக்கிற நிதியுதவி என்பதைப் பழங்கதையாக்கி, தனியார் கல்வி வியாபார நிறுவனங்கள் அதையும் கட்டாயப்படுத்தியே வசூலிக்கின்றன. இவ்வளவு தொகை தர வேண்டும் என்று நிர்ணயித்துக் கேட்கின்றன. அதில் பைசா குறைந்தாலும் சேர்க்கை அனுமதி கிடைக்காது என்று அச்சுறுத்துகின்றன. கட் டணமாகச் செலுத்தும் பணத்தில் பாதித் தொகைக்காவது ரசீது கிடைக்கும், நன்கொடை யிலோ எந்த ஒரு சான்றும் கிடைக்காது. இந்தப் பின்னணியில்தான், ‘டைம்ஸ் நவ்’ ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம், தனது நிருபர்களை மாணவர்களைப் போல் அனுப்பி, தமிழகத் தலைநகரில் இரண்டு பெரும் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் கட்டண, நன்கொடை கொள்ளையை காட்சிப்பதிவாகவே அம்பலப்படுத்தியுள்ளது. ஒரு நிறுவனம் தொழில திபர் வெங்கடாச்சலத்தால் நிறுவப்பட்ட, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழகமாகும். பாலாஜி மர

அரசியல் - இன்றும் தொடரும் இழிவு....

இந்தியச் சமூகத்தில் நிலவும் சாதிய பாலின ஒடுக்கு முறை தலித்துகள், பழங்குடியினர், பிற்பட்டோர், பெண் கள் யாவரையும் சொத்தும் கல்வியுமில்லாது தாழ்த்தி விட்ட நிலையில் சொத்தும் கல்வியும் உள்ளவர்களே வாக்காளராக முடியும் என்ற நிபந்தனையை முன்னிறுத் துவது மோசடியானது என்று அம்பலப்படுத்திய அம்பேத்கர், வயது வந்தோர் யாவருக்கும் வாக்குரிமை என்பதே மக்களாட்சியின் அடிப்படை என்றார். வாழ் வுரிமை யாவும் மறுக்கப்பட்ட கடைக்கோடி மனிதர் களின் கையில் வாக்குரிமையாவது ஒரு ஆயுதமாக இருக்கட்டும் என்பதே அவரது நோக்கம். ஆனால் இன்று அந்த கடைக்கோடி மனிதர்கள் தமது வாக்குரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு அருகி வருகிறது. சமூக அங்கத்தவர் என்ற முறையில் அவர்களுக்குள்ள பிறவுரிமைகளை தட்டிப் பறித்ததைப் போலவே அவர்களது வாக்குரிமையையும் தட்டிப் பறிக்கும் சூதுகளின் களமாக மாறிவருகிறது தேர்தல். காசுக்கு கிடைக்கும் ஒரு பண்டத்தைப்போல வாக்காளர் களை அணுகத் துணிகிற கும்பல் கலாச்சாரம் அரசியலில் பெருகி பணபலம், வன்முறை, ஊடக வலு மூலமாக வாக்குரிமையின் நோக்கங்களைச் சிதைக்கிறது. தேர்தல் களத்திலிருந்து கொள்கை சார்ந்த விவாதங்களை பலவந்தமாக வ