ஒரு வழியாய் மத்திய மந்திரி சபையில் பங்கேற்பது என தி . மு . க . நாட்டு நலன் கருதி முடிவெடுத்து விட்டது . தமிழர்களின் மீது அளவளாவிய பற்றும் பாசமும் கொண்ட தமிழக முதல்வர் தள்ளாத வயதிலும் தமிழ் நாட்டுக்கு நல்லது செய்தே தீருவேன் என்று எவ்வளவு உறுதியாய் இருக்கிறார் என்று நினைக்கையில் மெய் சிலிர்க்கிறது . அழகிரியின் சேவை அகில இந்தியாவுக்கும் தேவை என்று அவர் கண்டு உணர்ந்த பொழுதிலிருந்து அதற்க்காக அவர் பட்ட பாடுகள் சொல்லி மாளாது .. கடும் உடல் நலக்குறைவால் தேர்தல் பிரச்சாரங்களில் கூட பங்கேற்க இயலாமல் போனாலும் , ஓட்டு ஒன்றுக்கு நூற்றி ஐம்பதில் தொடங்கி மதுரையில் இரண்டாயிரம் வரை செலவிட்டு தனது கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து , கடும் முதுகு வலியையும் பொருட்படுத்தாது டில்லி சென்று போராடி , முடியவில்லை என்றவுடன் வெளியிலிருந்து ஆதரவு என அறிவித்து , பதவி ஏற்பு விழாவை புறக்கணித்து , கடைசியில் ஒரு வழியாக மன்மோகன் சிங் வேண்டி விரும்பி கேட்டு கொண்டதற்கு இணங்க இப்போது மந்திரி சபையில் பங்கேற்பது என எடுக்