இடுகைகள்

அக்டோபர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்

நாளை என்பது மிகத் தாமதம்..

”இருட்டு எனக்கு பிடிக்கும்...” எனக்கு மிகவும் பிடித்த, நிறைய பேருக்கு பரிந்துரை செய்த, எழுத்தாளர் ச.தமிழ்செல்வனின் புத்தகம்.... வாசித்து நீண்ட நாட்களாகிவிட்ட இந்த புத்தகத்தை இப்போது தேடி கொண்டிருக்கிறேன்... இப்போது நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இருட்டை நமக்கு பிடித்தே தீர வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம்... கருணாநிதியின் கடந்த ஐந்தாண்டு கால அரசின் மிக மோசமான வெளிபாடாக எந்த மின்வெட்டை முன்வைத்து இன்றைய தமிழக முதல்வர் கடந்த தேர்தலில் தெருதெருவாக பிரச்சாரம் செய்தாரோ அதே மின்வெட்டு இப்போதும் தொடர.. விழி பிதுங்கி நிற்கிறார்கள் மக்கள்... தமிழகத்தின் மொத்த விழிகளும் மின்சாரத்தின் வழி நோக்கி காத்திருக்க.. இன்னும் 10 மாதம் ஆகும் என மின் துறை அமைச்சர் அறிவிக்கிறார்... கல்வி, வேலை தொழில் என எல்லாமும் முடங்கி போய் கிடக்கிறது.... தனக்கும் தமிழ்நாட்டின் மின்வெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல தமிழகத்தின் முதல்வர் கள்ள மௌனம் சாதிக்கிறார்... எந்த பன்னாட்டு நிறுவனமும் தமிழகத்தில் மின் தட்டுபாட்டால் பாதிக்கப்படவில்லை என்பதை உணரும் போது புரியும்.. முதலாளிகள் நடத