இடுகைகள்

இந்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது

- சார்லி சாப்ளின் மன்னித்துக்கொள்ளுங்கள், நான் ஒரு பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலையும் அல்ல. நான் யாரையும் ஆளவோ வெற்றிகொள்ளவோ விரும்பவில்லை. முடிந்தால், அனைவருக்கும் உதவி செய்யவே விரும்புகிறேன். யூதர்கள், யூதரல்லாதவர்கள், கருப்பினத்தவர், வெள்ளையினத்தவர் என்று அனைவருக்கும் உதவவே விரும்புகிறேன். நாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவிசெய்துகொள்ளத்தான் வேண்டும். மனிதர்கள் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும், அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை. இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது. நம்முடைய நல்ல பூமி வளம் மிக்கது, எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றக் கூடியது. தொலைத்துவிட்ட பாதை வாழ்க்கைப் பாதை என்பது சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் இருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை நாம் தொலைத்துவிட்டோம். மனிதர்களின் ஆன்மாக்களில் பேராசை விஷத்தைக் கலந்துவிட்டது. அந்தப் பேராசை, வெறுப்பால் இந்த உலகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது, த

மோடி எவ்வளவு நேர்மையாளர்?

படம்
“சிலர் பிறக்கும்போதே மகத்துவத்துடன் பிறக்கிறார்கள்; சிலர் தங்கள் செயல்களால் மகத்துவத்தை அடைகிறார்கள்; சிலர்மீது மகத்துவம் திணிக்கப்படுகிறது.’’ என்பது ஷேக்ஸ்பியரின் வாசகம். இதில் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர தாமோதர்தாஸ் மோடி மூன்றாவது வகை. ‘எல்லாப் புகழும் மோடிக்கே’ என்பது பா.ஜ.க-வின் தாரக மந்திரமாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகள் பின்பற்றும் தனிநபர் வழிபாடு என்பது சில மாதங்களுக்கு முன்னர் வரை சங் பரிவாரத்தினருக்கு அந்நியமான விஷயமாக இருந்தது. இயக்கமும் கொள்கைகளுமே முதன்மையானவை என்பதில் சமீப காலம் வரை உறுதியாக இருந்த ஆர்.எஸ்.எஸ். இன்று கட்சியையோ கொள்கைகளையோ சொல்லி மக்களிடம் வாக்குகள் கேட்காமல் எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கும் மோடியை முன்னிறுத்துகிறது என்றால் மோடியின் சாதனை மகத்துவமானதுதான். அசாதாரணமான திறன்கள் இந்த நிலைக்கு அவரை உயர்த்த உதவிய அவரது ‘திறன்கள்’ அசாதாரணமானவை. 2002 கலவரத்தின்போது மோடி அரச நீதியிலிருந்து வழுவிவிட்டார், ஆகவே அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அன்றைய பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய் அடுத்த ஓரிரு நாட்களி

மனதை உடைக்கும் வல்லமை

படம்
அன்றாட வாழ்க்கையின் அங்கமாய் மின்தொடர்வண்டி பயணம் ஆகிவிட்ட பிறகு... சுமார் முக்கால் மணி நேரம் நீடிக்கும் பயணத்தில், வாசிப்பில் அமிழ்ந்து கிடக்கையிலோ, இசையில் மூழ்கி திளைக்கையிலோ, குட்டி தூக்கத்தில் குளிர் காயும் பொழுதிலோ, தொடர்வண்டிக்கு தொடர்பற்று திரியும் மனதை உடைக்கும் வல்லமை பார்வை திறனற்றவரின் குரலுக்கும், திருநங்கைகளின் கைதட்டும் ஓசைக்கும் வாய்த்ததெப்படி என விளங்கவே இல்லை.....

ஸ்னோடென் - அமெரிக்காவை அலற வைத்தவர்.

படம்
இது   ஒருவரின்   பெயர் .   இவர்   புரட்சிகாரர்   இல்லை .   கம்யுனிஸம்   பேசவில்லை .   எந்த   நாட்டின்   விடுதலைக்காகவும்   குரல் கொடுக்கவில்லை .   ஆனால்   அனேகமாய்   ஒரு   தனி   மனிதனை   அமெரிக்கா   கொலைவெறி   கொண்டு   தேடும்   முதல்   நபர் இவர்தான் .   இந்த   தனிமனிதனுக்கு   எதிராக   சீனா,   ரஷ்யா   போன்ற   வளர்ந்த   நாடுகளை   மிரட்டும்   அளவுக்கு   அமெரிக்கா சென்றுள்ளது . வேறொன்றுமில்லை. கொஞ்ச   நாட்களுக்கு   முன்பாக   விக்கிலீக்ஸ்   இணையதளம்   எப்படி   அமெரிக்காவின்   ரகசியங்களை வெளியிட்டதோ   அதே   போல   இவரும்   ஒரு   தகவலை   வெளியிட்டார். அவ்வளவு   தான். ஆனால்   அந்த   ஒற்றைத் தகவலுக்குள்   ஒளிந்திருக்கிறது   உலகின்   சர்வாதிகாரி   யார்   என்பதற்கான   பதில். உலகில்   பெருகி   வரும்   சமூக   வலைதளங்களில்   செயல்படும்   ஒவ்வொரு   தனிமனிதனையும்   அமெரிக்க   உளவுத்துறை கண்காணித்து   வருகிறது   என்பதே   அந்த   தகவல். சும்மா   இருக்குமா   சர்வதேச   சண்டியர்   அமெரிக்கா…?? சல்லடை   போட்டு   சலிக்கிறது   உலகை. ஸ்னோடென்னுக்காக. ஒளித்து   வைத்திருந்தால்   கடும்   விளைவுகளை  

கிழக்கிந்திய முதலாளித்துவமும் கேடானதே!

- அருணன் நூலின் மூன்றாம் பகுதிக்கான தலைப்பே பரபரப்பானது. அது : “மார்க்ச்சுக்கும், மார்க்கெட்டுக்கும் அப்பால் உலகத்துக்கான முன் மாதிரி”. இந்திய அரசியலில் மூன்றாவது மாற்று பற்றிப் பேசப்படுவது போல உலக சமூகக் கட்டமைப்பிற்கு ஒரு மூன்றாவது மாற்றைப் பரிந்துரைக்கிறார் எஸ்.குருமூர்த்தி. தலைப்பைப் பார்த்தால் இது சோசலிசமும் அல்ல, முதலாளித்துவமும் அல்ல என்பது போலப்படும். ஆனால் முத்தாய்ப்பாக இவர் கூறுவது “நமக்குத் தேவை முறைசாரா அமைப்புகளோடு இணைந்து செயலாற்றக் கூடிய ஒரு சந்தை. அது மட்டுமே நிலைத்து நிற்கும்” என்பதுதான். சந்தை என்று இவர் கூறுவது முதலாளித்துவத்தையே என்பதைக் கண்டு வந்தோம். அதிலே ஒரு வகையைத் தான் மனிதர் பரிந்துரைக்கிறார். ஆக, இது மூன் றாவது மாற்றே அல்ல. ஏற்கனவே இருக்கிற முதலாளித்துவ அமைப்பில் ஒரு முக்கிய மாறுதலையே கோருகிறார்.அது என்னவெனில் “முறைசாரா அமைப்பு களோடு இணைந்து செயலாற்றக்கூடிய” தன்மை முதலாளித்துவத்திற்கு வேண்டும். அதுதான் அமெரிக்க பாணி முதலாளித்துவத் திடம் இல்லை என்கிறார். அப்படியெனில், “முறைசாரா அமைப்புகள்” என்று இவர் எவற் றைச் சொல்லுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.மனி

எதிர்ப்பது மேற்கத்திய முதலாளித்துவத்தையே!

- அருணன் நூலின் முதல் பகுதியில் “மறைந்து போன மார்க்சியம்” பற்றிப் பேசிய எஸ். குருமூர்த்தி இரண்டாம் பகுதியில் “மங்கி வரும் மார்க்கெட்டு” பற்றி பேசுகிறார். முதலாளித்துவத்தைக் குறிக்கவே இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அது பொருத்தமானது அல்ல. “மார்க்கெட்” - சந்தை - எனப்படுவது விற்கிறவரும், வாங்குகிறவரும் சந்திக்கும் இடம். அது முதலாளித்துவத்தின் கண்டு பிடிப்பு அல்ல. வெள்ளைக்காரர்கள் இங்கே வருவதற்கு முன்பே வாரச்சந்தை, மாதச் சந்தை என்று கூடியதை தமிழர் களாகிய நாமறிவோம். ஆண்டான் - அடிமை யுகம் காலத்திலிருந்து இருக்கக் கூடிய சந்தையை ஏதோ முதலாளித் துவத்தின் கண்டுபிடிப்பு போலச் சொல்லி, அதை மார்க்சியர்கள் இப்போது தான் அங்கீகரித்திருக்கிறார்கள் என்பது போல எழுதிச் செல்கிறார். இரண்டுமே தவறு.முதலாளித்துவத்தின் தனித்தன்மை சந்தையில் இல்லை; அது ஆலைமுறை என்கிற புதிய உற்பத்தி முறையிலும், அதற் கான மூலதன ‘உருவாக்கத்திலும்’ அதைத் தனியுடைமையாகக் கொண்ட முதலாளிகள் என்கிற புதிய வர்க்கம் பிறந்ததாலும், அதன் மறுபக்கமாக உழைப்பையே சொந்தமாகக் கொண்ட தொழிலாளர்கள் எனும் மற்றொரு புதிய வர்க்கம் உதயமானதில

மார்க்ஸ் இவர்களை இப்போதும் மிரட்டுகிறார்!

- அருணன் திருவாளர் எஸ். குருமூர்த்தி “மறைந்து போன மார்க்சியமும், மங்கி வரும் மார்க்கெட்டும்” என்றொரு நூல் எழுதியிருக்கிறார். “கிழக்கு” பதிப்பகத் தின் இந்த வெளியீட்டில், “அரசியல், பொருளாதார விமர்சகர்” என்று இவர் குறிப்பிடப்பட்டுள்ளார். ஏதோ பொதுவான மனிதர் போன்ற பிம்பத்தைக் காட்டும் வார்த்தைகள்! உள்ளே தனது முன்னு ரையில் “சுதேசி விழிப்புணர்வு இயக்க நண்பர்கள்” பற்றிக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். அந்த இயக்கம் ஆர்.எஸ். எஸ்.சின் துணை அமைப்பு என்பதை அறிந்து கொண்டால் இவர் எப்படிப்பட்ட வர் என்பதைச் சட்டென்று புரிந்து கொள்ளலாம்.மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த நூலின் முதல்பகுதியில் “லெனின், ஸ்டா லின், சிலைகளைப் போல மார்க்சும் ஒரு பழமைச் சின்னமாகவும் பயன் ஒழிந்து போன மனிதராகவும் ஆகிவிட்டார்” என்று உற்சாகமாகப் பிரகடனப்படுத்தியிருக் கிறார் மனிதர். அது மட்டுமா? இதற்கான காரணத்தையும் அரிய கண்டுபிடிப்பாய் வெளியிட்டிருக்கிறார். அது “காரல் மார்க்ஸ் பழமையாகிப் பயனற்றுப் போன தற்கு மார்க்சைவிட மார்க்சிஸ்டுகளே காரணம்”. பயனற்றுப் போனவர் பற்றி இந்த அதிமேதாவி ஏனிப்படி வரிந்து கட் டிக்கொண்டு ஆங்கிலத்தில் நூல